ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை, போராட்டத்தை ரசிப்பவர்கள் சீமான் பேச்சு

ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை என்றும் போராட்டத்தை ரசிப்பவர்கள் என்று சீமான் பேசியுள்ளார்.

Update: 2018-09-09 13:06 GMT
சென்னை,

நாம் தமிழர் கட்சி சார்பில் கல்விக் குறித்த கருத்தரங்கம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கருத்தரங்கத்தில் சீமான் பேசியதாவது:

தமிழ் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நிலை வர வேண்டும். அப்போது தான் அனைவரும் தமிழ் மொழியை கற்பார்கள். தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டது.  ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை நாங்கள் போராட்டத்தை ரசிப்பவர்கள்.

ரஜினி இனம் மாறுவது ஆளவா?  என கேள்வி எழுப்பிய அவர், உயிரை கொடுத்தேனும் அதை தடுப்போம்.  அப்போது ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டnஅர், இப்பொது ஆங்கிலம் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்