பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 16-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 16-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Update: 2018-09-10 22:15 GMT
சென்னை, 

‘பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 16-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும்’ என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரோ நிறுவனமும், அதன் வணிகக் கிளையுமான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனமும் இணைந்து இங்கிலாந்துக்கு சொந்தமான செயற்கைகோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

வெள்ள கண்காணிப்பு, விவசாய பயிர் மதிப்பீடு, காடுகள் கண்காணிப்பு (மிதமான மற்றும் மழை வளம்), பேரிடர் மேலாண்மை, கடல் பயன்பாடுகள் (கப்பல் கண்டறிதல், எண்ணெய் கசிவு கண்காணிப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகள்) உள்ளிட்ட பூமியின் கண்காணிப்புக்காக 430 கிலோ எடை கொண்ட நேவாசார்-எஸ் செயற்கைகோளுடன், 450 கிலோ எடை கொண்ட எஸ்.எஸ்.டி.எல், எஸ்1-4 உள்ளிட்ட செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள்கள் 16-ந் தேதி இரவு 10.07 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். இதற்கான ‘கவுண்ட்டவுன்’ 15-ந் தேதி பகல் 1.30 மணிக்கு தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்