காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

உத்திரமேரூர் அருகே இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 3 ஊழியர்கள் பலியாகினர்.;

Update:2019-04-05 13:19 IST
காஞ்சிபுரம், 

உத்திரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டியில் தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 100* க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

நேற்று நள்ளிரவு ஆலையில் இரவுப்பணி நடந்தது. அப்போது அங்கிருந்த பாய்லர் திடீரென வெடித்தது. இதில் அருகில் இருந்த 8 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மற்ற ஊழியர்கள் அவர்களை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகிலேஷ், சுரேந்தர், தினேஷ் என தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்