கொக்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

மங்கலம்பேட்டை அருகே கொக்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-11-09 00:56 IST

மங்கலம்பேட்டை, 

மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் மங்கலம்பேட்டை அடுத்த வலசை கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள வயல்வெளி பகுதியில் 3 பேர் நாட்டு துப்பாக்கியுடன் கொக்குகளை வேட்டையாட முயன்றனர். இதைபார்த்த போலீசார் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த இறையூரை சேர்ந்த செல்வராஜ் மகன் லியோ பிரகாஷ் (வயது 25), அருளப்பன் மகன் அந்தோணி ராஜ் (30), தாவீது மகன் குழந்தை ராஜ் (27) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்