திருப்பத்தூர்,
திருப்பத்தூர் ஆதித்திருத்தளிநாதர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், பன்னீர், உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேக அலங்காரம் நடைபெற்றது. அதேபோல் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.