கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்

Update: 2023-03-23 19:00 GMT

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தேவீரஅள்ளி முருகன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை சோதனை செய்தபோது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் அந்த ஊரை சேர்ந்த சரவணன் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்