தபால்காரருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

தபால்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-11-06 00:15 IST

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் மேல தெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 46). இவர் மருக்காலங்குளத்தில் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மேலநீலிதநல்லூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பாலமுருகன் (26) என்பவர் ஒருவர் குறித்து அவதூறாக பேசிக் கொண்டிருந்தார். இதை வள்ளிநாயகம் தட்டிக்ேகட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், வள்ளிநாயகத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வள்ளிநாயகம் பனவடலிசத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்