இன்று மின்சாரம் நிறுத்தம்
ஊத்தங்கரையில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;
ஊத்தங்கரை
போச்சம்பள்ளி கோட்டத்திற்குட்பட்ட ஊத்தங்கரை துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் ஊத்தங்கரை பஸ் நிலையம், அம்பேத்கர் நகர், சேலம் ரோடு, பெரியார் நகர், காமராஜர் நகர், கலைஞர் நகர், ரெட்டியார் தோட்டம், பாபா நகர், வித்யா நகர், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.