பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் என்ஜினீயர் கைது

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-07 10:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோமதி என்ற பெண் குப்பை கொட்டுவதற்கு செல்லும்போது அவர் அணிந்து இருந்த நகையை பறித்துக்கொண்டு மர்மநபர் தப்பி ஓடினார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கோமதி என்ற பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது 31), என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சென்னையில் தங்கி என்ஜினீயராக வேலை செய்து வருவதாகவும், வேலையில்லாத நாட்களில் சென்னை புறநகர் பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்

இதனையடுத்து கைது செய்யப்பட்ட காமராஜை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்