தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Update: 2023-03-08 18:45 GMT

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் மணியகாரன் காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 34). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அனுபிரியா(27. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. அவர், கடந்த ஒரு மாதமாக சரிவர வேலைக்கு செல்லாமல் அதிகமாக மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த சங்கர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்