கூடலூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
கூடலூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகில் உள்ள மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினா். அதில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
இதையடுத்து பணம் வைத்து சூதாடியதாக கூடலூர் கம்போஸ்ட் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் (வயது 43), பாண்டியன் (56), குள்ளிகவுடர் தெருவை சேர்ந்த திருப்பதி (60), சூளைமேடு தெருவை சேர்ந்த பரமசிவம் (58) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.