குலசேகரன்பட்டினத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

குலசேகரன்பட்டினத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-06-30 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100-வது பிறந்தநாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் காவடிப்பிறை தெருவில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் க. இளங்கோ தலைமை தாங்கி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். இதில் மாநில மகளிரணி பிரசார குழு செயலாளர் ஜெசி பொன்ராணி, மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்