மாரமங்கலம் கோவிலில் சந்திரசேகர சுவாமிக்கு அன்னாபிஷேகம்
மாரமங்கலம் கோவிலில் சந்திரசேகர சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.;
ஏரல்:
ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் சமேத சந்திரசேகர சுவாமி மற்றும் சந்திரசேகரி அம்பாள் கோவிலில் ஐப்பசி அன்னாபிேஷக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு சந்திரசேகர சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகமும், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.