லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பாவூர்சத்திரம் தினசரி காய்கனி மார்க்கெட் அருகில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-22 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் தினசரி காய்கனி மார்க்கெட் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு குலசேகரப்பட்டியைச் சேர்ந்த அப்பாவு (வயது 62) என்பவர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.53 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், ரூ.19 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்