லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-02 18:45 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டிவனம் மேம்பாலத்தின் கீழே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திண்டிவனம் மரக்காணம் ரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(வயது 69) என்பதும், லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்