வெங்கடேசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா
வெங்கடேசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா;
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் மொண்டிபாளையத்தில் வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி வெங்கடேசப்பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக்கடனை இந்த கோவிலில் செலுத்தலாம் என்ற ஐதீகம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. மேலத்திருப்பதி, ஊஞ்சல்வனம், சீனிவாசபுரம் என்றெல்லாம் போற்றப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வருகிற 17-ந்தேதி முதல் புரட்டாசி திருவிழா தொடங்குகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தினமும் காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி திருவீதியுலாவும் நடக்கிறது. உற்சவ நாட்களில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மூலவருக்கு வாராந்திர சனி, ஞாயிறு மாதாந்திர அமாவாசை நாட்களில் மட்டும் காலை 7 மணிக்கு திருமஞ்சனம் செய்யப்படும். இந்த நிலையில் புரட்டாசி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.