தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
. முக கவசம் தனி மனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்;
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது ,
இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. முக கவசம் தனி மனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் .கொசு உற்பத்தியை தடுக்க கவனமுடன் செய்லபட்டு வருகிறோம். காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை.
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என்று பேட்டி அளித்துள்ளார்.