சந்திர கிரகணத்தையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை
சந்திர கிரகணத்தையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.;
ராமேசுவரம்,
சந்திரகிரகணம் நிகழ்வு மாலை 3.32 மணியில் இருந்து 5.50 மணி வரையிலும் ஏற்பட்டது. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம்,தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மேகம் சூழந்து இருந்ததால் சந்திர கிரகணம் நிகழ்வு தெரியவில்லை. சந்திர கிரகணத்தையொட்டி ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பகல் 1 மணி அளவில் நடை சாத்தப்பட்டது. வழக்கமாக பகல் 3 மணிக்கு திறக்கப்படும் நடை சந்திர கிரகணத்தையொட்டி மாலை 4.30 மணிக்கு கிரகணசாமி தங்க ரிஷப வாகனத்தில் வைக்கப்பட்டு கோவிலில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமி கோவிலுக்கு வந்த பின்னர் இரவு 7 மணிக்குமேல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டனர். சந்திர கிரகணத்தையொட்டி பகல் 1 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலின் ரதவீதி சாலை மற்றும் உள்பகுதி சாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.