ராம்ஜிநகர், இனாம்குளத்தூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

ராம்ஜிநகர், இனாம்குளத்தூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update:2022-11-01 01:04 IST

மணிகண்டம் ஒன்றியம் அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ராம்ஜிநகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தானத்தம், ஆலம்பட்டி புதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையபட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரிய திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்