கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
காரையூரில் கலாம் நினைவு கைப்பந்து கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 14 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை விராச்சிலை அணியினரும், இரண்டாம் பரிசை காரையூர் அணியினரும், மூன்றாம் பரிசை வளர்ச்சிறுப்பட்டி அணியினரும், நான்காம் பரிசை மதுரை உசிலம்பட்டி அணியினரும் பெற்றனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை காரையூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.