ஈரானில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு - 3 பேர் பலி

ஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-07-02 00:14 GMT

தெஹ்ரான்,

ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும்பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்