உக்ரைனில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்: 21 பேர் பலி

உக்ரைனின் ஒடேசா நகரத்தில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

Update: 2022-07-01 16:22 GMT

கீவ்,

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலானது சுமார் 5 மாதங்களை எட்டி விட்டது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றிய ரஷியா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டே வருகிறது. மறுபுறம் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவி அளித்து வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைனின் ஒடேசா நகரத்தில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கருங்கடல் பகுதியில் உள்ள ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய மறுநாளே ஏவுகணை தாக்குதலை ஒடேசா நகரம் மீது நடத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்