பிரம்ம முகூர்த்தம்

* அதிகாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரையிலான நேரத்தை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்பார்கள்.

Update: 2017-04-13 09:13 GMT
இந்த நேரத்தில் எழுந்து பாடங்களைப் படித்தால் மனதில் நன்கு பதியும்.

* மூன்றாம் பிறை சந்திரனைக் காண்பது சிறப்பு.

* வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப் பொழுது குங்குமம் கொடுத்தாலும், முதலில் நீங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.

* பெண்கள், தூங்கி எழுந்து வீட்டின் வாசல் கதவை திறக்கும்போது, அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவார்கள்.

* வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும்.

* வாகனத்தின் மீது அமர்ந்து சாப்பிடக் கூடாது.

மேலும் செய்திகள்