பத்துகர விநாயகர்
பத்துக் கரங்களுடன் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான் இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ளது கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயம். இந்தக் கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் பத்துக் கரங்களுடன் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான் இருக்கிறார். மூஞ்சுறு வாகனத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தரும் இவரை வழிபட்டால், இன்னல்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர் களின் நம்பிக்கை.