நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவிலில் கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போத வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.