மகா கணபதி கோவில் தேரோட்டம்
அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;
அய்யம்பேட்டை,
அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
பாபநாசம் தாலுகா கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா கணபதி கோவில் உள்ளது. இக் கோவிலின் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற்றது.நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா கணபதி எழுந்தருள திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. 4 வீதிகளை வலம் வந்த தேர் மீண்டும் கோவிலை அடைந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனர். அறநிலையத் துறை, வருவாய், உள்ளாட்சி, அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பிலும், போலீசாரின் பலத்த பாதுகாப்புடனும் தேரோட்டம் நடைபெற்றது.
தீர்த்தவாரி
மதியம் அன்னதானம் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை மகா அபிசேகம், மதியம் தீர்த்த வாரியும், யாகசாலை அபிசேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு விசேஷ அலங்காரம் நடைபெறுகிறது. 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கண்ணாடி பல்லக்கில் சாமி வீதிஉலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.