பாபநாசம் சீனிவாசபெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
பாபநாசம் சீனிவாசபெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
பாபநாசம்
பாபநாசத்தில் உள்ள பங்கஜவல்லி தாயார் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆடி திருவோண ஜேஸ்டாபிஷேகம் என்கிற திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ்குமார், தக்கார் லட்சுமி, பாபநாசம் இறைப்பணி மன்ற தலைவர் குமார், கோவில் எழுத்தர் முருகபாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.