திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
செங்கோட்டையில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது;
செங்கோட்டை:
செங்கோட்டை ஆரியநல்லூர் தெருவில் முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் மற்றும் கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது. கடையநல்லுார் ஆரூத்ரா திருவாசக கமிட்டி சிவபிரேமா தலைமை தாங்கினார். முன்னதாக முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.