ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தாவில் 2 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் 2 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது.
கொல்கத்தா,
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘பிளே-ஆப்’ சுற்றில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் வருகிற 23-ந் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 25-ந் தேதியும் நடைபெறும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார். இந்த ஆட்டங்கள் முதலில் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தன. சென்னை அணியின் உள்ளூர் மைதானமாக புனே தேர்வு செய்யப்பட்டதால் அங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திட்டமிட்டபடி முதலாவது தகுதி சுற்று ஆட்டம் மும்பையில் 22-ந் தேதியும், இறுதிப்போட்டி மும்பையில் 27-ந் தேதியும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘பிளே-ஆப்’ சுற்றில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் வருகிற 23-ந் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 25-ந் தேதியும் நடைபெறும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார். இந்த ஆட்டங்கள் முதலில் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தன. சென்னை அணியின் உள்ளூர் மைதானமாக புனே தேர்வு செய்யப்பட்டதால் அங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திட்டமிட்டபடி முதலாவது தகுதி சுற்று ஆட்டம் மும்பையில் 22-ந் தேதியும், இறுதிப்போட்டி மும்பையில் 27-ந் தேதியும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.