இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் ஸ்ரேயாஸ், ராயுடு சேர்ப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டு உள்ளனர். #ODI

Update: 2018-05-08 15:30 GMT
பெங்களூரு,

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  இந்த போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது.  இதில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டு உள்ளனர்.  சுரேஷ் ரெய்னா மற்றும் மணீஷ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

இந்த 3 போட்டி தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு பெங்களூருவில் இன்று நடைபெற்றது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ், ராயுடு, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், சஹல், குல்தீப், சுந்தர், புவனேஷ்வர், பும்ரா, ஹர்தீக், கவுல், உமேஷ் ஆகியோர் ஆவர்.

மேலும் செய்திகள்