இங்கிலாந்தில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. #IndianTeam

Update: 2018-05-08 16:35 GMT
பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.  இதற்கு விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதனுடன் முத்தரப்பு போட்டிகளிலும் இந்திய ஏ அணி விளையாட உள்ளது.  இதற்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருந்திடுவார்.  இதேபோன்று 4 நாள் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய ஏ அணி விளையாடுகிறது.  

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஜூலை 16ந்தேதி முதல் 19ந்தேதி வரை ஒர்செஸ்டர் நகரில் நடைபெறுகிறது.  இதேபோன்று மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராகவும் இரண்டு 4 நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த அணியின் கேப்டனாக கருண் நாயர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.  இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன் வீரர்கள் விவரம்:

கருண் நாயர் (கேப்டன்), ரவிகுமார், மயாங் அகர்வால், பிருத்விஷா, ஈஸ்வரன், விஹாரி, அங்கித், விஜய், பரத் (விக்கெட் கீப்பர்), ஜெயந்த் யாதவ், நதீம், அங்கித் ராஜ்பூட், சிராஜ், சைனி, ரஜ்னீஷ் ஆகியோர் ஆவர்.

மேலும் செய்திகள்