மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி: ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி அடைந்ததையடுத்து ரசிகர்களிடம் ஷாருக்கான் மன்னிப்பு கோரியுள்ளார். #IPL #SRK

Update: 2018-05-10 10:34 GMT
கொல்கத்தா, 

பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின்  இணை உரிமையாளராக உள்ளார். நடப்பு சீசனில் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா அணி, நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 

சொந்த மைதானத்திலேயே படுதோல்வியை கொல்கத்தா அணி சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில், கொல்கத்தா அணியின் மோசமான தோல்விக்கு ரசிகர்களிடம் ஷாருக்கான் மன்னிப்பு கோரியுள்ளார். 

தனது டுவிட்டரில் ஷாருக்கான் வெளியிட்டுள்ள பதிவில், “ ‘விளையாட்டு என்பது உத்வேகத்துடன் (Spirit) தொடர்புடையது. வெற்றி தோல்வியால் அது பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக  ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்