இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோத உள்ளன.

Update: 2018-05-20 23:30 GMT
மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஐதராபாத் சன் ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

23-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் 3 மற்றும் 4-வது இடங்களை பெற்ற கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் சந்திக்கும். இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் 25-ந்தேதி மோதும். இறுதிப்போட்டி 27-ந்தேதி நடைபெறும். எஞ்சிய 4 ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

மேலும் செய்திகள்