ஐ.பி.எல். கோப்பை: சென்னை மக்களுக்கு சமர்ப்பணம் - சி.எஸ்.கே. அணி வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட்

தங்களது வெற்றி குறித்து சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் தமிழில் டுவிட் செய்துள்ளார்

Update: 2018-05-28 12:24 GMT
சென்னை 

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இது குறித்து ஹர்பஜன் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- பல காயங்களுக்கு ஆறுதலாக இந்த கோப்பையை மக்களுக்கு சமர்ப்பணம் செயகின்றோம். காரியம் கை கைக்கூடியது.உங்கள் பாசத்திற்கும்! நேசத்திற்கும்! தலைவணங்குகின்றேன்.தாய் போல் எமை சீராட்டிய தமிழ்நாடு வாழியவே.அனைத்து துன்பங்களையும் மறந்து எங்கள் தோளோடு தோள் நின்றமைக்கு நன்றி
தோட்டாவென கிளம்பிய பந்துகள்.கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம்.எமை அடித்து,அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம்.மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி என்றார்.தற்போது இந்த செய்தி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும் செய்திகள்