சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்த தோனி

சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை வீட்டிற்கு அழைத்து, தோனி மதிய உணவு விருந்து அளித்துள்ளார். #Dhoni

Update: 2018-06-02 06:46 GMT
ராஞ்சி,

உடல் முழுவதும் இந்திய மூவர்ணக்கொடி நிறத்தை பூசிக்கொண்டு, இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண வரும் ரசிகரான சுதிர் கவுதமை, கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள், எவரும் பார்க்காமல் இருந்திருப்பது கடினம். 

சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை சச்சின் தெண்டுல்கர் பலமுறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சுதீர் கவுதமை, இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி, தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து மதிய உணவு விருந்து அளித்துள்ளார். சுதிர் கவுதம், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

மேலும் செய்திகள்