இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விராட் கோலி, மந்தனா, கவுருக்கு விருது

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இந்த கவுரவத்தை பெறுவது 5–வது முறையாகும்.

Update: 2018-06-07 22:00 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இந்த கவுரவத்தை பெறுவது 5–வது முறையாகும்.

முதல்முறையாக வீராங்கனைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்க உள்ளது. இதன்படி 2016–17–ம் ஆண்டு சீசனுக்கு சிறந்த சர்வதேச வீராங்கனையாக இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், 2017–18–ம் ஆண்டு சீசனுக்கு ஸ்மிர்தி மந்தனாவும் தேர்வாகியுள்ளனர். வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட் பெறுகிறார். பெங்களூருவில் வருகிற 12–ந்தேதி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்