துளிகள்

இலங்கை கிரிக்கெட் வீரர் ஹெராத் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.

Update: 2018-07-10 22:30 GMT

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கில் 3-வது வரிசையில் லோகேஷ் ராகுலும், 4-வது வரிசையில் கேப்டன் விராட் கோலியும் விளையாடினர். இதுதான் சரியான பேட்டிங் வரிசை என்று கருதுகிறேன். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இதே வரிசையில் களம் காண்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

* சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ், இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க இருப்பதாக கூறியுள்ளார். இதே போல் உள்நாட்டில் டைட்ன்ஸ் அணிக்காக விளையாடி இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

*இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் 40 வயதான ஹெராத் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்