ஸ்மித் இல்லாததால் கோலியே சிறந்த பேட்ஸ்மேன்: ரிக்கி பாண்டிங்

ஸ்டீவ் ஸ்மித் இல்லாததால் விராட் கோலியே உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். #RickyPonting

Update: 2018-07-13 04:04 GMT
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித் தற்போது இல்லாததால் விராட் கோலியே உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் எனக் கூறியுள்ளார். முன்னதாக மெல்போர்னில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், நிருபர்களின் கேள்விக்கு பாண்டிங் பதிலளித்து வந்தார். அப்போது அவரிடம் ’உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங் கூறியதாவது, ”ஸ்டீவ் ஸ்மித் தற்போது இல்லாததால் விராட் கோலி தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன். தற்போது ஸ்டீவ் ஸ்மித் விளையாடி இருந்தால் அவரே உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் எனக் கூறியிருப்பேன். ஆனால் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் தொடரில் பந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில், ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி பெற்ற அதிக வெற்றிகளுக்கு ஸ்மித்தே காரணம். குறிப்பாக ஆஷஸ் தொடர். கடந்த நான்கு வருடங்களில் ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றிகளுக்கு ஸ்மித்தின் பங்களிப்பு அளப்பரியது. ஸ்மித்தின் சிறந்த மற்றும் துல்லியமான பேட்டிங்கை, கடந்த வருடம் நடைபெற்ற ஆஷஸ் தொடரை நீங்கள் பார்த்திருந்தால் தெரியும்” எனக் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்