டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தூத்துக்குடிக்கு பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது

Update: 2018-07-28 13:46 GMT
சென்னை,

டி.என்.பி.எல்  கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் துத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி துத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்து வீசி வருகிறது. 

கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்ததால் அடுத்த சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது. இருப்பினும், எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்று ரசிகர்களை மகிழ்விக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முனைப்பு காட்டும் என தெரிகிறது. அதேவேளையில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் கடந்த இரு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியுற்றதால், இன்றைய போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும் எனவே இன்று நடைபெறும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 4 முறையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஒரு தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்