ஐந்தாண்டு கால தடைக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்பும் வங்கதேச வீரர்

உள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தனக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு கால தடைக்கு பிறகு வங்காளதேச வீரர் முகம்மது அஷ்ரபுல் கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்புகிறார். #MohammadAshraful

Update: 2018-08-11 14:30 GMT
டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் முகம்மது அஷ்ரபுல் கடந்த 2013 ஆம் ஆண்டு உள்ளூரில் நடைபெற்ற வங்கதேச ப்ரிமீயர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அஷ்ரபுல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மேலும் அஷ்ரபுலுக்கு 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் வங்காளதேச கிரிக்கெட் நிர்வாகக்குழு, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் அஷ்ரபுலிற்கான தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. இதனிடையே வரும் 13-ஆம் தேதியுடன் அஷ்ரபுலிற்கான ஐந்தாண்டு கால தடை முடிவடையும் நிலையில், சர்வதேச போட்டிகளில் தான் விளையாடும் நாளை எதிர்நோக்கியுள்ளதாக முகம்மது அஷ்ரபுல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நீண்ட நாட்களாக ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு காத்திருக்கிறேன். கடந்த இரண்டு சீசன்களில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறேன். இனிமேல் நான் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது” எனக் கூறினார்.

மேலும் செய்திகள்