இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-08-13 22:15 GMT
லண்டன்,

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. பிரிஸ்டல் இரவு விடுதி தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகி வரும் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மற்றபடி அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் வழக்கு விசாரணை காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்