ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

நியூசிலாந்தை சேர்ந்த வெட்டோரி நீக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பதவிக்கு தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-08-30 20:30 GMT

பெங்களூரு, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தை சேர்ந்த வெட்டோரி நீக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பதவிக்கு தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது. கேரி கிர்ஸ்டன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்