மைதானத்தில் காதலை சொன்ன சென்னை அணி வீரர்...? யார் இந்த ஜெயா பரத்வாஜ் ...?

தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

Update: 2021-10-08 04:53 GMT
துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 98 ரன்கள் விளாசினார்.

இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு  நிகழ்ச்சி நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து, காதலை வெளிப்படுத்தினார். அப்போது டோனியின் மனைவி சாக்சி மற்றும் உடனிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தனர். 

சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தீபக் சாஹர் இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி, 48 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சித்தார்த் பரத்வாஜின் தங்கை ஜெயா பரத்வாஜ் ஆவார். ஜெயா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டத்திற்காக சாஹருடன் துபாய்க்கு சென்றிருந்தார். ஜெயா டெல்லியைச் சேர்ந்தவர் மற்றும் ஒரு நிறுவன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சென்னை  போட்டிகளின் போது ஜெயா அடிக்கடி  தென்படுவார்.

தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

இருவரும் நீண்ட காலமாக காதலித்து  வருவதாகவும் ஆனால் அவர்களின்  காதலை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த ஜோடி ஒருபோதும் பொதுவெளியில்  ஒன்றாக தோன்றியது இல்லை.


மேலும் செய்திகள்