கண்டங்களுக்கான கால்பந்து: இறுதிப்போட்டியில் இந்தியா–கென்யா இன்று மோதல்

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது.

Update: 2018-06-09 21:00 GMT

மும்பை, 

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன. இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா–கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கென்யாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3–0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்த இந்திய அணி மீண்டும் கென்யாவை இறுதிப்போட்டியில் சந்திக்கிறது. இந்திய அணியின் கேப்டன் சுனித் சேத்ரி இந்த போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்து நல்ல பார்மில் உள்ளார். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்