அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் சிந்து வங்கி அணிக்கு 2–வது வெற்றி

92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

Update: 2018-09-11 20:45 GMT

சென்னை, 

92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 5–வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய கடற்படை–இந்தியன் ஆயில் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய கடற்படை அணியில் ஜூக்ராஜ்சிங் 19–வது நிமிடத்திலும், இந்தியன் ஆயில் அணியில் குர்ஜிந்தர்சிங் 60–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் சிந்து வங்கி அணி, பெங்களூரு ஆக்கி சங்க அணியை சந்தித்தது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பஞ்சாப் சிந்து வங்கி அணி 6–5 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஆக்கி சங்க அணியை சாய்த்து 2–வது வெற்றியை ருசித்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஓ.என்.ஜி.சி.–இந்திய ராணுவம் (பிற்பகல் 2.30 மணி), சென்னை ஆக்கி சங்கம்–பெங்களூரு ஆக்கி சங்கம் (மாலை 4.15 மணி), மத்திய செயலகம்–மும்பை ஆக்கி சங்கம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்