துபாயில் நடந்த மாஸ்டர்ஸ் கபடி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது

துபாயில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கபடி தொடரின் இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தினை வென்றது.

Update: 2018-06-30 16:12 GMT

துபாயில் கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன. 

இதில் லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இதில் முதலாவதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஈரான் அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  அடுத்து இரண்டாவதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து இன்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்கொரியா அணிகள் மோதின.  இதில், 44-26 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி ஈரானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றது.

மேலும் செய்திகள்