மாநில பள்ளி கைப்பந்து: அரைஇறுதியில் செயின்ட் மேரிஸ்

2-வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

Update: 2018-07-20 21:30 GMT

சென்னை, 

2-வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் என்.ஜி.என்.ஜி. (பொள்ளாச்சி) அணி 25-14, 25-17 என்ற நேர்செட்டில் வேலுடையார் (திருவாரூர்) அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. பெண்கள் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பாரதியார் (ஆத்தூர்) அணி 25-4, 25-8 என்ற நேர்செட்டில் சத்ரியா (விருதுநகர்) அணியை தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் செயின்ட் மேரிஸ் (சேலம்) அணி 25-18, 25-11 என்ற நேர்செட்டில் மகரிஷி வித்யாலயா (சென்னை) அணியையும், ஜேப்பியார் அணி 25-9, 16-25, 25-22 என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோசப் அணியையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

மேலும் செய்திகள்