வுசூ விளையாட்டில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி

வுசூ விளையாட்டில் இந்தியாவுக்கு, 4 பதக்கங்கள் கிடைப்பது உறுதியானது.

Update: 2018-08-21 22:15 GMT
ஜகர்தா,

ஆசிய விளையாட்டில் வுசூ போட்டியில் இந்திய வீரர்கள் நேற்று வெகுவாக ஆதிக்கம் செலுத்தினர். தற்காப்பு கலைகளில் ஒன்றான வுசூ விளையாட்டில் சான்டா பிரிவுகளில் இந்திய வீரர்கள் களம் கண்டனர். குத்துச்சண்டை பாணியில் விளையாடப்படும் இந்த பிரிவில் கையால் குத்துவிடுவதுடன் காலாலும் உதைத்து இடறி விடுவார்கள். இதில் நரேந்தர் கிரிவால் (65 கிலோ), சூர்யா பானு பர்தாப் சிங் (60 கிலோ), சந்தோஷ்குமார் (56 கிலோ) மற்றும் பெண்களில் ரோஷிபினி தேவி (60 கிலோ) ஆகிய இந்தியர்கள் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியதோடு குறைந்தது வெண்கலப்பதக்கத்தையும் உறுதி செய்தனர். இவர்களுக்கான அரைஇறுதி பந்தயங்கள் இன்று நடக்கிறது.

மேலும் செய்திகள்