புரோ கபடி: மும்பை, பெங்களூரு அணிகள் வெற்றி

புரோ கபடி போட்டியில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றிபெற்றன.

Update: 2018-11-03 22:30 GMT
நொய்டா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா (மும்பை அணி) 31-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்து 6-வது வெற்றியை பதிவு செய்தது.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 29-35 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சிடம் பணிந்தது. இன்றைய ஆட்டங்களில் தபாங் டெல்லி- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), உ.பி.யோத்தா- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்