புரோ கபடி லீக்: பெங்களூரு அணி சாம்பியன்
புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை,
12 அணிகள் பங்கேற்ற 6–வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் 7–ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு நடைபெற்ற மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பெங்களூரு புல்ஸ்–குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 38-33 என்ற செட் கணக்கில், குஜராத் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.